சனா: அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் மீது அரேபிய கூட்டுப்படைகள் நடத்திவரும் தாக்குதலின் ஒரு பகுதியாக, ஏமன் சிறை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 33 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏமன் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக, ஈரான் நட்டு அரசின் ஆதரவுபெற்ற ஹவுத்தி இனப் போராளிகள் புரட்சியிவ் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்தும், அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்காகவும் சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள், ஹவுத்தி இனப் போராளிகள் மீது 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக ஏமனின் அல்-ஜைதியா மாநிலத்தில் உள்ள ஹொடைடா நகரச் சிறையின் மீது அரேபிய கூட்டுப்படைகள் நேற்று மாலை விமான தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் 33 பேர் பலியானதாக அங்கிருந்த வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.