மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சிலிகான் வேலி தொழில் அதிபர்களுடன் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் சிலிகான் வேலியைச் சேர்ந்த தொழில் துறை தலைவர்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

Published On :

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் சிலிகான் வேலியைச் சேர்ந்த தொழில் துறை தலைவர்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
"மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலின்போது, தொழில்துறைத் தலைவர்களுடன் முரண்பட்ட வகையில் கருத்துகளைத் தெரிவித்து வந்த அவர், முதல் முறையாக அவர்களைச் சந்தித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள "டிரம்ப் டவர்ஸ்' கட்டடத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது:
நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புத்தாக்கத் திட்டங்களை வகுக்கவும் ஆலோசிப்பற்காக, இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. குறிப்பாக, இங்குள்ள பணிக்குச் செல்லும் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு நீங்கள் (தொழில் துறை தலைவர்கள்) தரும் ஆலோசனைகளை திறந்த மனதோடு கேட்பதற்கு விரும்புகிறேன். இதற்காக, எந்த நேரத்திலும் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், எல்லை கடந்து வெளிநாடுகளில் தொழில் செய்யும்போது பல்வேறு கட்டுப்பாடுகளையும் பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றன. இந்தப் பிரச்னைகளைக் களைவதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும் என்றார் அவர்.
அந்தக் கூட்டத்தில், "மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, "ஆப்பிள்' நிறுவனத்தின் டிம் குக், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைவர்கள் லாரி பேஜ், எரிக் ஸ்மித் மற்றும் ஐபிஎம், ஃபேஸ்புக், சிஸ்கோ, அமேஸான், ஆரக்கிள், இண்டெல், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.