செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவின் புகழ் பெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள புகழ் பெற்ற ரயில்நிலையங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயில்நிலையத்தில் இன்று மாலை திடீர் என குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானதாக ரஷ்ய ஊடங்களில் வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.