பாகிஸ்தான் அரசின் இணையதளத்தை வியாழக்கிழமை ஊருவிய மர்ம நபர்கள், அதில் இந்திய தேசிய கீதத்தைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இணையதளப் பக்கத்தில், சுதந்திர தின வாழ்த்துச் செய்தியையும் மர்ம நபர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்.
'ல்ஹந்ண்ள்ற்ஹய்.ஞ்ர்ஸ்.ல்ந்' என்ற அந்த இணையதளம் வியாழக்கிழமை மதியம் 3.00 மணியளவில் ஊடுருவப்பட்டது.
அதில், ஆகஸ்ட் 15, சுதந்திர தின வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்துச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், '' மனதில் சுதந்திரம், வார்த்தைகளில் நம்பிக்கை, உணர்வில் கெளரவம்... இவற்றை சாத்தியப்படுத்திய மாபெரும் தலைவர்களை வணங்குவோம்'' என்ற வாசகமும், அதைத் தொடர்ந்து, ''ஜன கன மன..'' பாடலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக, இஸ்லாமாபாதில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகமும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

