மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த சரக்கு விமானம்: கிர்கிஸ்தானில் 32 பேர் பலி!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சரக்கு விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விபத்தில் 37 பேர் பலியானார்கள்.

News image
Updated On :16 ஜனவரி 2017, 6:53 am

பிஷ்கேக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சரக்கு விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விபத்தில் 37 பேர் பலியானார்கள்.

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று இஸ்தான்புலில் இருந்து ஹாங்காங்கிற்கு சென்று கொண்டிருந்தது. வழியில் பிஷ்கேக் விமான நிலையத்தில் அந்த விமானம் இன்று காலை  தரையிறங்கிய போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது

மக்கள் நெருக்கம் நிறைந்த பிஷ்கேக் நகரில் இன்று கடும் பனிமூட்டம் இன்று நிலவியது. இந்த பனிமூட்டத்துக்கு இடையே தரையிறங்க முயன்ற பொழுதுதான் விமானம் தவறுதலாக குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்ப்டுகிறது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 32 பேர் பலியாகினர். அவர்களில் 4 விமான பைலட்களும் அடங்குவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அங்கே மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.