டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காஷ்மீர் விவகாரத்தில் முக்கியப் பங்காற்ற சீனா ஆர்வம்

காஷ்மீர் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றி, இந்தியா- பாகிஸ்தான் உறவை மேம்படுத்த ஆர்வத்துடன் இருப்பதாக சீனா கூறியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:25 pm

DIN

காஷ்மீர் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றி, இந்தியா- பாகிஸ்தான் உறவை மேம்படுத்த ஆர்வத்துடன் இருப்பதாக சீனா கூறியுள்ளது.
சிக்கிம் மாநிலம் டோகா லா பகுதி குறித்து இந்தியா- சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள சூழலில் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை சீனா கையிலெடுத்துள்ளது.
பெய்ஜிங்கில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜிங் சுவாங் கூறியதாவது:
காஷ்மீர் எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் மோதல்களால் அந்த இருநாடுகளின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு மட்டும் பிரச்னை ஏற்படவில்லை.
ஆசிய பிராந்தியத்தின் அமைதிக்கும் பிரச்னை ஏற்படுகிறது. அந்த இருநாடுகளும் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இருநாடுகள் இடையே உறவை மேம்படுத்தவும், காஷ்மீர் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றவும் சீனா ஆர்வத்துடன் உள்ளது என்றார் அவர்.
இந்தியா- சீனா இடையே சிக்கிமை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள எல்லைப் பிரச்னையை, முன்பு எழுந்த எல்லைப் பிரச்னைகளைப் போல பேசித் தீர்க்கலாம் என்பது போன்ற கருத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, 'இந்தியா- சீனா இடையே முன்பு எழுந்த எல்லைப் பிரச்னைகளில் இருந்து, இப்போதைய பிரச்னை முற்றிலும் வேறுபட்டுள்ளது.
முன்பு சரியாக வரையறுக்கப்பட்டாத எல்லையில் பிரச்னை எழுந்தது. எனவே அப்போது பேச்சு நடத்தப்பட்டது.
ஆனால் இப்போது இருதரப்பும் எல்லையாக ஒப்புக் கொண்ட பகுதிக்குள் இந்திய ராணுவம் ஊடுருவியுள்ளது குறித்து சீனா பலமுறை எச்சரிக்கை விடுத்துவிட்டது.
சிக்கிம் பகுதிக்கு சிறப்பான வரலாற்றுப் பின்னணி உண்டு. அப்பகுதியில் இந்தியா- சீனா இடையே தெளிவான எல்லை வகுக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று இந்தியாவை மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.