கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க நேற்று இரவு மலேசியா புறப்பட்டுச் சென்ற வைகோ, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதாகவும், வைகோ மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் மலேசிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், வைகோ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் மலேசிய அதிகாரிகள் கூறி, அவரை மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். வைகோவின் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர்.
இன்று இரவு 10.45 மணிக்கு மாற்று விமானத்தில் வைகோ சென்னைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வைகோ வந்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டும், அவரை மலேசியாவுக்குள் அனுமதிக்க விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


