ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மாயம்

தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் திடீரென்று காணாமல்

News image
Updated On :18 ஜூன் 2017, 2:29 pm

DIN

தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் திடீரென்று காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் நகரில் இயங்கிவரும் பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை காரில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை கடத்திச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.

அவர்களை உடனடியாக தேடி கண்டுபிடிக்குமாறு பாகிஸ்தான் அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அவர்களை தேடும் பணிக்காக மூன்று சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.