டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆஸ்திரேலியாவுக்கு எம்.பியானாலும், குழந்தைக்கு அம்மாதான்: தாய்ப்பால் கொடுத்து கொண்டே மசோதா தாக்கல் செய்த எம்.பி! 

ஆஸ்திரேலியா நாட்டு பெண் எம்.பி ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த விஷயம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:16 pm

DIN

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா நாட்டு பெண் எம்.பி ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்த விஷயம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டு பாராளுமன்ற மேலவை உறுப்பினர் லாரிசா வாட்டர்ஸ். தற்பொழுது ஆஸ்திரேலிய பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற அவர் தன்னுடைய 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்ஸுடன் சென்றிருந்தார்.

குழைந்தைக்கு அவர் பாலூட்டிக் கொண்டிருந்த பொழுது சபாநாயகர் வாட்டர்ஸை மசோதா ஒன்றினை தாக்கல் செய்து பேச அழைத்துள்ளார். உடனே சிறிதும் தயக்கம் காட்டாமல் எழுந்த வாட்டர்ஸ், குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானத்தினை தாக்கல் செய்து, அதை நிறைவேற்றவும் செய்துள்ளார்.

பொதுவாக பெண்கள் குழந்தைகளுக்கு பொது இடத்தில் வைத்து பாலூட்டுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனால் பொது இடமாக இருந்தால் என்ன? யாரோ ஒருவர், அவர் மனதினில் எண்ணுவதற்காக நமது பிள்ளைக்கு பால் கொடுப்பதை நாம் தவிர்க்க வேண்டுமா என்பது வாட்டர்ஸி ன் செய்கை நமக்கு எழுப்பும் கேள்வியாக உள்ளது.

கடந்த வருடம்தான் பெண் உறுப்பினர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என்று ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை வாட்டர்ஸ் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.