மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஹிஸ்புல் தலைவர் சையத் சலாலுதீன் சர்வதேச பயங்கரவாதி: அமெரிக்கா அறிவிப்பு

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத்

News image
Updated On :27 ஜூன் 2017, 3:23 am

DIN


வாஷிங்டன்: பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாவுதீனை(71) சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து, பின்னணியாக செயல்படும் சையத் சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சிகள் எடுத்து வந்தன.

இந்நிலையில், சலாவுதீன், பல தற்கொலை படையினருக்கு பயிற்சியளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததாலும் இந்த முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளது.

அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. காஷ்மீரில் நிலவும் அசாதரண சூழலுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதமே காரணம் என இந்தியா பல ஆண்டுகளாக கூறிவருவது தற்போது நிருபிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிசுடன் விவாதித்தார். இதைத் தொடர்ந்து, சையத் சலாவுதீனை சர்வதேச பயங்கவாதி என்று அறிவிக்கும் அரசாணையை அமெரிக்கா வெளியிட்டது. இது இந்தியாவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.