டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இங்கிலாந்தில் பதுங்கியுள்ள 23,000 தீவிரவாதிகள்: உளவுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்! 

சமீபத்தில் இங்கிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மான்செஸ்டர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் உளவுத்துறை நடத்திய அதிரடி ஆய்வில், அங்கே 23 ஆயிரம் தீவிரவாதிகள் ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:37 pm

DIN

லண்டன்: சமீபத்தில் இங்கிலாந்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மான்செஸ்டர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் உளவுத்துறை நடத்திய அதிரடி ஆய்வில், அங்கே 23 ஆயிரம் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கடந்த 22-ம் தேதி, பிரபல அமெரிக்க பாப் பாடகி அரினா-வின் இசை நிகழ்ச்சி நடந்த அரங்கத்தில், மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 119 பேர் காயமடைந்தனர்.

போலீசாரின் விசாரணையில் இந்த தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த, லிபியாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 11 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்பொழுது முகமது அபிதியின் சிசிடிவி கேமராவில் பதிவான படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் ராணுவ உளவுத்துறை அந்நாடு முழுவதும் நடத்திய விரிவான ஆய்வில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இவர்களில் சந்தேகப்படும்படியான 3 ஆயிரம் பேர் முதல் கட்ட விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர் . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.