தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

நியூயார்க் வாகனத் தாக்குதலில் ஈடுபட்டது எங்கள் இயக்கத்தவர்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஒப்புதல்! 

நியூயார்க்கில் நடைபாதை பயணிகள் மீது சரக்கு லாரியை மோத வைத்து 8 பேரைக் கொலை செய்த சைபுல்லா சாய்போவ், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று உலகளாவிய ஐஎஸ் தீவிரவாத அமைப்பு... 

News image
Updated On :3 நவம்பர் 2017, 1:09 pm IST

நியூயார்க்: நியூயார்க்கில் நடைபாதை பயணிகள் மீது சரக்கு லாரியை மோத வைத்து 8 பேரைக் கொலை செய்த சைபுல்லா சாய்போவ், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று உலகளாவிய ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் மன்ஹேட்டன் பகுதி ஹுஸ்டன் சாலையில் நவ.1-ம் தேதி வெள்ளை நிற சரக்கு லாரி ஒன்று அங்கிருந்த நடைபாதையில் சென்ற பாதசாரிகள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்தத் தாக்குதலை நடத்தியதாக சைபுல்லா சாய்போவ் என்பவரை அமெரிக்க போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் அகதியாக அமெரிக்காவில் குடியேறிய அவர்,  உபேர் கால்டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராகவும், சரக்கு வாகன ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

அவர் ஓட்டி வந்த வாகனத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி, ஆதரவு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் சைபுல்லா சாய்போவ், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று உலகளாவிய ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐஎஸ் அமைப்பின் அறிக்கையினை அமெரிக்க கண்காணிப்புக் குழு செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐஎஸ் அமைப்பின் போர் வீரர்களில் ஒருவர்தான் நியூயார்க் நகரத் தெருவில் இந்த தாக்குதலை நடத்தினார். அல்லாவின் கருணையால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆபரேஷன், அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த தூண்டியுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.