விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பேஸ்புக்கில் ஒவ்வொரு 'லைக்'குக்கும் ஒவ்வொரு குத்து: மனைவியின் முகம் சிதையுமளவுக்கு கணவன் கொடூர சித்ரவதை! 

பேஸ்புக்கில் மனைவியின்  புகைப்படத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு 'லைக்'குக்கும், அவரை முகத்தில் குத்து விட்டு தாக்கி சித்ரவதை செய்து வந்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

News image
Updated On :29 நவம்பர் 2017, 12:27 pm

நெம்பி (உருகுவே): பேஸ்புக்கில் மனைவியின்  புகைப்படத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு 'லைக்'குக்கும், அவரை முகத்தில் குத்து விட்டு தாக்கி சித்ரவதை செய்து வந்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

உருகுவே நாட்டின் சன்ஸின் மாகாணத்தில் உள்ள நெம்பி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அடோல்பினா (21). இவரது கணவர் கேலியானோ (32). மனைவியின் மீது சந்தேகப்பட்டு கேலியானோ எப்போதும் அவரைத் தாக்குவார் என்று கூறப்படுகின்றது. அத்துடன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை தொடர்ச்சியாக சித்ரவதைகளும் செய்து வந்துள்ளார். மேலும் அடோல்பினா விருப்பதுக்கு மாறாக அவரை வீட்டில் அடைத்து வைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.         

சித்ரவதையின் உச்ச கட்டமாக பேஸ்புக்கில் அடோல்பினாவின்  புகைப்படத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு 'லைக்'குக்கும், அவரை முகத்தில் குத்து விட்டுத் தாக்கி வந்துள்ளார். அத்துடன் அவரது படத்திற்கு ஏதேனும் கமெண்ட்டுகள் வந்தாலும் சரி, ரியாக்ஷன் சிம்பல்கள் இடப்பட்டாலும் சரி, அதற்கான நோட்டிபிகேஷன்கள் வந்தவுடன் அடோல்பினாவைத் தாக்கத் துவங்கி விடுவார்.      

Story image

இந்த கொடூரம் இன்னும் தீவிரமாகி அடோல்பினாவின் பேஸ்புக் பக்கத்தினை முழுவதுமாக கேலியானோ பொறுப்பில் எடுத்துக் கொண்டு, தானே புகைப்படங்களை அப்லோடு செய்து விட்டு, ஒவ்வொரு 'லைக்'கும் வர வர மிருகத்தனமாக தாக்கத் துவங்கியுள்ளார். ஆனால் அடோல்பினாவின் நண்பர்கள் யாருக்கும் இந்த விஷயங்கள் எதுவும் தெரியாது.

Story image

இறுதியாக நேற்று முன்தினம் நடந்த தாக்குதல்களின் காரணமாக அடோல்பினா இறந்து விடுவார் என்று பயந்த கேலியானோவின் தந்தை, மகனுக்குத் தெரியாமல் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீஸார் தற்பொழுது கேலியானோவைக் கைது செய்துசிறையில் அடைத்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அடோல்பினாவின் வழக்கறிஞர் மார்ட்டின்ஸீ கூறியதாவது:

அடோல்பினாவின் வாய் முற்றிலுமாக உடைந்துள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தொடர் அடிகளின் காரணமாக தோல் வழன்று காணப்படுகிறது. அடோல்பினாவின் பேஸ்புக் பக்கத்தினை கேலியானோ முழுமையாக கட்டுப்படுத்தி வந்துள்ளார். அவரது புகைப்படத்திற்கு 'லைக்' மற்றும் 'கமெண்ட்' இடுபவர்களுக்கும், அடோல்பினாவுக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டி வந்திருக்கிறார்.

Story image

தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அடோல்பினாவுக்கு விரைவில் முக ஒழுங்கமைப்பு சிகிச்சை செய்யபட உள்ளது. தன்னுடைய முகத்தினை அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு முகம் மாறியுள்ளது. 

சிறையில் உள்ள கேலியானோவுக்கு அந்நாட்டுச் சட்டப்படி 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.