வியத்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்தது. 21 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேலும், காணாமல் போன 34 பேரை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
16,740 வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மத்திய மற்றும் வடக்கு வியத்நாம் பகுதிகளில் உள்ள ஆறு மாகாணங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஏக்கரிலான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக வியத்நாம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.