சீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

ஈரான் புது ஏவுகணைச் சோதனை: அமெரிக்கா எச்சரிக்கைக்கு சவால்

அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் புதிய ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை நடத்தியது ஈரான். 

News image
Updated On :23 செப்டம்பர் 2017, 10:40 am

நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கும் விதமாக ஈரான் அரசு புதிய ஏவுகணைச் சோதனையை நடத்தியது.

ஈரான் நாட்டின் ராணுவ அணிவரிசை வெள்ளிக்கிழமை நடத்தியது. அதில், இந்தப் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.

இந்த புதிய மத்திய ரக ஏவுகணையின் மூலம் பல ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் படைத்தது. இதனால் ஈரானின் அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளை எளிதில் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.

2015-ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் தொடர்பான ஒப்பந்தம் உலக நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்டது. இதனால், ஈரான் போன்ற வளைகுடா நாடுகள் அணு ஆயுத தயாரிப்பு மற்றும் ஏவுகணைச் சோதனைகள் நடத்துவதில் கட்டுப்பாடுகள் இருந்தன.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அணு ஆயுத ஏவுகணைச் சோதனைகளை நடத்தக் கூடாது என ஈரான் நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு சவால் விடும் வகையில் இந்தச் சோதனையை ஈரான் தற்போது நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.