மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

சிரியா தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 112-ஆக உயர்வு

சிரியாவில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 112-ஆக அதிகரித்தது என்று மனித உரிமைகள் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சிரியாவின் ரஷீதீன் பகுதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த பேருந்துகள்.

Published On :

சிரியாவில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 112-ஆக அதிகரித்தது என்று மனித உரிமைகள் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சிரியா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஃபுவா, காஃப்ரயா ஆகிய பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அங்கு சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அரசு முயற்சி செய்து வருகிறது. நூற்றுக்கணக்கான பேருந்துகள் மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அலெப்போ நோக்கி பேருந்துகளில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அலெப்போ நகர் அருகேயுள்ள ரஷீதீன் பகுதியில் பேருந்துகள் சென்று கொண்டிருந்தபோது, வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வேகமாக ஓட்டி வந்து மோதி தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
தாக்குதல் நிகழ்ந்த இடத்திலேயே அப்பாவிப் பொதுமக்கள் 43 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர்.
அந்தத் தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 112-ஆக அதிகரித்தது என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தத் தற்கொலைத் தாக்குதலை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது போன்ற தாக்குதல்களை இதற்கு முன்னர் பல முறை இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர்.
ஃபுவா மற்றும் காஃப்ரயா பகுதிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனிடையே, சிரியா அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஈரான், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் கத்தார் ஆகிய நாடுகளின் தலையீட்டில் பொதுமக்களை அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி வந்த நிலையில்தான் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, பொதுமக்களை ஏற்றிச் சென்ற பிற பேருந்துகள் வழியிலேயே பல மணி நேரம் நிறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.