பிரிட்டனில் நச்சுத் தாக்குதலுக்குள்ளான முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலின் மகள் யூலியா , ரஷியாவிலுள்ள தனது உறவினருடன் தொலைபேசியில் பேசியதாக ரஷிய அரசுத் தொலைக்காட்சி வியாழக்கிழமை தெரிவித்தது.
ரஷியாவைச் சேர்ந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ6-இலும் ரகசியமாக இணைந்த அவர், ரஷிய ராணுவ உளவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி பிரிட்டனுக்கு ரகசியத் தகவல்களை அளித்து வந்தார்.
எனினும், அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்கிரிபாலை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த நிலையில், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட செர்கெய் ஸ்கிரிபால், பிரிட்டனில் வசித்து வருகிறார்.
இந்தச் சூழலில், செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது 33 வயது மகள் யுலியா மீது கடந்த மாதம் 4-ஆம் தேதி நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு, அவர்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று பிரிட்டன் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் ஆகியவை தங்கள் நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டன.
இதனால், ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், ரஷியாவிலுள்ள தனது உறவினர் விக்டோரியாவுடன், நச்சுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த யூலியா ஸ்கிரிபால் தொலைபேசியில் பேசியதாக ரஷிய அரசுத் தொலைக்காட்சி வியாழக்கிழமை தெரிவித்தது.
மேலும், அந்த தொலைபேசி உரையாடலின் ஒலிப் பதிவையும் அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அந்த உரையாடலில், தானும், தனது தந்தையும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவிருப்பதாகவும் யூலியா தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், இந்தத் தகவலை பிரிட்டன் அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீர் சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்! | Pondicherry

ஜனநாயகத்தை அழிக்க முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமிக்கிறார் பிரதமர் மோடி! - கார்கே காட்டம்!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



