தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆப்கனில் தற்கொலைத் தாக்குதல்: 8 செய்தியாளர்கள் உள்பட 25 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் 8 செய்தியாளர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.

News image
காபூலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை சுற்றி வளைக்கும் பாதுகாப்புப் படையினர்.
Updated On :30 ஏப்ரல் 2018, 7:35 pm

DIN

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நடத்திய தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் 8 செய்தியாளர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தலைநகர் காபூலின் மத்தியப் பகுதியில் திங்கள்கிழமை காலை இரண்டு ஐ.எஸ். தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர்.
இதில், 8 செய்தியாளர்கள், 4 காவலர்கள் உள்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த செய்தியாளர்களில், ஏ.எஃப்.பி. போட்டோகிராபர் மற்றும் உள்ளூர் டிவி சேனல் ஒளிப்பதிவாளரும் அடங்குவர். 
மேலும், 45 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த தாக்குதல் நடத்தப்பட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு, காந்தஹார் மாகாணத்தில் மற்றொரு தற்கொலைத் தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தினர். இதில், 11 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களது வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆப்கன் தலைநகர் காபூலில் அமைந்துள்ள புலனாய்வு சேவை தலைமை அலுவகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் இந்த மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று அந்த வலைதள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
காபூலில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடம் ஷாஸ் தரக் பகுதியாகும். இங்குதான் நேட்டோ நாடுகளின் தலைமையகம், வெளிநாட்டு தூதரகங்கள், அலுவலகங்கள் ஆகியவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.