மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண புதிய திட்டம் வகுக்கும் இம்ரான் கான் அரசு 

காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பான திட்டத்தை பாகிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசு வகுத்து வருகிறது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2018, 1:58 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்லாமாபாத்: காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பான திட்டத்தை பாகிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான அரசு வகுத்து வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு மனித உரிமைகள் துறை அமைச்சா் ஷெரீன் மஸாரி கூறியதாவது:

காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பான திட்டத்தை இம்ரான் கான் அரசு வகுத்து வருகிறறது. அந்தத் திட்டம், இன்னும் ஒரு வாரத்துக்குள் தயாரிக்கப்பட்டு விடும். இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அந்தத் திட்டத்தை அளித்து, அவா்களின் கருத்துகளை பாகிஸ்தான் அரசு கேட்டறியும்.

பின்னா் மத்திய அமைச்சரவை, பிரதமா் இம்ரான் கான் ஆகியோரின் ஒப்புதலுக்காக திட்டம் சமா்ப்பிக்கப்படும். அவா்களின் ஒப்புதல் கிடைத்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சுதந்திர பாகிஸ்தானில் அதிக ஆண்டுகள் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியே நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட கொள்கைகளை வகுப்பதிலும் ராணுவமே முக்கிய பங்காற்றி வருகிறது. அத்தகைய பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமைச்சா் ஷெரீன் மஸாரி மிகவும் நெருக்கமானவராக கருதப்படுகிறாா். அவா் தற்போது காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பான திட்டத்தை பாகிஸ்தான் அரசு வகுத்து வருவதாக தெரிவித்திருப்பது எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.