கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருந்த துருக்கி நாட்டைச் சேர்ந்த 15 பேர்களுக்கு தூக்குத் தண்டனை அறிவிப்பு! 

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருநது அந்நாட்டு ராணுவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த 15 பேர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2018, 1:06 pm

DIN

பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளாக இருநது அந்நாட்டு ராணுவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த 15 பேர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஈராக் ராணுவம் தற்பொழுது மீட்டெடுத்தது. அப்பொழுது ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து ராணுவத்துக்கு எதிராக சண்டையில் ஈடுபட்ட ஏராளமானோர் பிடிபட்டனர்.

இவர்கள் துருக்கி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் மீது பாக்தாத் நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் துருக்கி நாட்டைச் சேர்ந்த  15 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் சட்டப்படி மேல் முறையீடு செய்ய இயலும் என்று நீதிமன்ற கோர்ட்டு செய்தி தொடர்பாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த வாரம் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒரு துருக்கி பெண்ணுக்கு தூக்குத் தண்டனையும், 10 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.