அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் வரும் 12-ஆம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பானது 2,500-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச சந்திப்பாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த சந்திப்பு சிறப்பாக நடைபெற்றால் கிம் ஜாங் உன்னை அமெரிக்காவுக்கு அழைப்பேன் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சந்திப்புக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையில் சாதாரண சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். இந்த சந்திப்பு நேர்மறையாக நிறைவடைந்தால் வடகொரியாவின் பொருளாதாரத்துக்கு சீனா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உதவும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் சந்தித்து பேசவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


