தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாள ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பித்யா தேவி பண்டாரி தேர்வு! 

நேபாளத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பித்யா தேவி பண்டாரி இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :13 மார்ச் 2018, 1:25 pm

DIN

காத்மண்டு: நேபாளத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பித்யா தேவி பண்டாரி இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஜனாதிபதியாக இருந்த பித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தற்போதைய ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். அதே சமயம் நேபாள காங்கிரஸ் கட்சியின் சார்பில் குமாரி லக்ஷ்மி ராய் அவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

275 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 550 மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். இந்த தேர்தலின் முடிவு செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது. இதில் பித்யா தேவி பண்டாரி வெற்றி பெற்றதாக அந்நாட்டு பாராளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

அவர் விரைவில் பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.