மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடிநீர் குழாயை உடைத்ததற்கு தண்டனை: சிறுமியின் வாயில் திணிக்கப்பட்ட மாட்டுச் சாணம்! 

நேபாளத்தின் பங்கே மாவட்டத்தில் குடிநீர் குழாயை உடைத்தாள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு வயது சிறுமியின் வாயில் மாட்டுச் சாணம் திணிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2018, 10:52 am

காத்மாண்டு: நேபாளத்தின் பங்கே aமாவட்டத்தில் குடிநீர் குழாயை உடைத்தாள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு வயது சிறுமியின் வாயில் மாட்டுச் சாணம் திணிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேபாளத்தின் பங்கே மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்புர். இங்கு கிதா பரியர் (50) என்ற பெண்  வசித்து வருகிறார். திங்கள் அன்று மாலை அவரது வீட்டின் முன்பகுதியில் பக்கத்துக்கு வீட்டினைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக அந்தச் சிறுமி வாசலிலிருந்த  குடிநீர்க் குழாயினை உடைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டு கோபமுற்ற கிதா பரியர், அந்த சிறுமியின் வாயில் மாட்டுச் சாணத்தினை திணித்துள்ளார்.

விபரம் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் வந்து சிறுமியினை மீட்டனர். பரியர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.