தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடிநீர் குழாயை உடைத்ததற்கு தண்டனை: சிறுமியின் வாயில் திணிக்கப்பட்ட மாட்டுச் சாணம்! 

நேபாளத்தின் பங்கே மாவட்டத்தில் குடிநீர் குழாயை உடைத்தாள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு வயது சிறுமியின் வாயில் மாட்டுச் சாணம் திணிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2018, 10:52 am

IANS

காத்மாண்டு: நேபாளத்தின் பங்கே aமாவட்டத்தில் குடிநீர் குழாயை உடைத்தாள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு வயது சிறுமியின் வாயில் மாட்டுச் சாணம் திணிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேபாளத்தின் பங்கே மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்புர். இங்கு கிதா பரியர் (50) என்ற பெண்  வசித்து வருகிறார். திங்கள் அன்று மாலை அவரது வீட்டின் முன்பகுதியில் பக்கத்துக்கு வீட்டினைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக அந்தச் சிறுமி வாசலிலிருந்த  குடிநீர்க் குழாயினை உடைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டு கோபமுற்ற கிதா பரியர், அந்த சிறுமியின் வாயில் மாட்டுச் சாணத்தினை திணித்துள்ளார்.

விபரம் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் வந்து சிறுமியினை மீட்டனர். பரியர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.