மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து: வட கொரியா மீண்டும் விருப்பம்

அதிபர் கிம் ஜாங் உன்-வுடனான பேச்சுவார்த்தையை டிரம்ப் ரத்து செய்த பிறகும் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் வடகொரியா இறங்கியுள்ளது.

News image
Updated On :25 மே 2018, 5:23 am

அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையில் அமைதியை நிலை நாட்ட இருநாட்டு அதிபர்களும்  ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 1953 கொரிய போருக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையில் இரு தலைவர்கள் சந்திக்க இருந்தது இதுவே முதன்முறை. அதனால், இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நோக்கி உலகமே காத்திருந்தது. 

இதற்கிடையில், வடகொரியா தனது அணு ஆயுத சோதனை கூடத்தை அழித்து விட்டதாக தெரிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-வுடனான சந்திப்பை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த முடிவு வடகொரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இருப்பினும், டிரம்புடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையை நடத்த வடகொரிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து, வடகொரிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கூறுகையில், 

"நாங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் எண்ணத்தில் இருப்பதை அமெரிக்காவுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். இந்த பேச்சுவார்த்தையை தடை செய்தது பியோங்யாங் மற்றும் வாஷிங்டன் இடையிலான பகையை காண்பிக்கிறது.     

இருநாடுகளுக்கு இடையிலான பகையுறவை தீர்க்க இந்த சந்திப்பு மிகவும் அவசியமானது. டிரம்புடனான சந்திப்பு புதிய தொடக்கத்தை தரும் என்பதால் வடகொரிய அதிபர், அமெரிக்காவுடனான இந்த பேச்சுவார்த்தைக்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தற்போதும் தயாராக தான் உள்ளது. 

நாங்கள் எங்களது இலக்கில் இருந்து மாறவே இல்லை. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்தும் நடவடிக்கைகளையும் எடுப்போம். நாங்கள் குறுகிய மனநிலையில் இல்லாமல் தற்போதும் அமெரிக்காவுடன் பேச தயாராக உள்ளோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.