தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் சனிக்கிழமை திடீரென சந்தித்து சுமார் 2 மணி நேரங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாடுகளின் தலைவர்களும் எல்லையோரம் அமைந்துள்ள தென் கொரிய பகுதியில் சந்தித்துப் பேசினர். வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையில் பேசுவது இதுவே முதன்முறையாகும்.
அமெரிக்கா மற்றும் வட கொரிய இடையேயான சந்திப்பு வெற்றிகரமாக அமைவது தொடர்பாகவே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தென் கொரிய செய்தி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சந்திப்பின் முழுக் காரணம் மற்றும் சந்திப்பின் போது நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான விவரங்களை தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவிக்கவுள்ளதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், ஜூன் 12-ஆம் தேதிக்குள் இரு நாடுகளின் தலைவர்களும் சந்திக்க வாய்ப்புள்ளதாக டொனால்டு டிரம்ப் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


