நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இண்டர்போல் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம்ஜோங் யாங் தேர்வு 

இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம்ஜோங் யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :21 நவம்பர் 2018, 6:38 pm IST

லியான்ஸ்: இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சர்வதேச நாடுகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் லியான்ஸ் நகரில் உள்ளது. 

இந்த அமைப்பின் தலைவராக இருந்த சீனாவைச் சேர்ந்தவரான மெங் ஹோங்வெய், சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் சொந்த ஊருக்கு சென்ற போது திடீரென  மாயமானர்.  பின்னர்  லஞ்சம் பெற்ற புகாரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாகவும் பின்னர் சீன அரசு விளக்கம் அளித்தது.

இதனையடுத்து இண்டர்போல் துணைத் தலைவராக இருந்த  ரஷ்யாவின் அலெக்சாண்டர் புரோகோப்சக் தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினார்.  அவருக்கு எதிராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் என்பவர்  போட்டியிட்டார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவளித்தன. 

இந்நிலையில் இண்டர்போல் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்  என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.