நைரோபி: கென்யாவின் வடக்குப் பகுதியில் புதனன்று காலை பேருந்து கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து அந்நாட்டின் வடபகுதியில் விக்டோரியா நதிக்கரையில் அமைந்துள்ள கிசுமு என்ற இடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த் பேருந்தில் 67 பேர் பயணிக்கக் கூடிய வசதி உள்ளது.
அப்பேருந்தானது கெரிச்சோ மாகாணத்தின் போர்ட் டெர்னான் என்ற இடத்திற்கு அருகே வந்துகொண்டிருந்த பொழுது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலை அருகே இருந்த சிறு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குளானது.
இந்த விபத்தில் 31 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் மரணமடைந்தனர். இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட அந்த இடமானது அடிக்கடி இத்தகைய விபத்துகள் நடக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது
இந்தத் தகவலை பிபிசி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
விபத்தில் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

13.4.1976: அவசர நிலையை நீக்க பிரதமர் இந்திரா நிபந்தனை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


