மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உகாண்டாவில் கடும் நிலச்சரிவு: 34 பேர் பலி 

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடும் மழையினைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவின் காணமாக  34 பேர் பலியாகியுள்ளனர்.  

News image
Updated On :12 அக்டோபர் 2018, 3:28 pm

கம்பாலா:  ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடும் மழையினைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவின் காணமாக  34 பேர் பலியாகியுள்ளனர்.  

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புடுடா மாவட்டத்தில் பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழையின் காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பலியாகி உள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

அத்துடன் வெள்ளப் பெருக்கின் காரணமாக அங்குள்ள மூன்றுக்கு மேம்பட்ட கிராமங்கள் முழுவதும் மூழ்கியுள்ளன. 

மீட்பு பணியிவ் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கூறுகையில், 'நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் புதைந்துள்ள காரணத்தால் பலி எண்ணிக்கை உயரக்  கூடும்.' என்று தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.