தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

எல்லையில் படைகள் நீக்கம்: கொரிய நாடுகள், ஐ.நா. மீண்டும் பேச்சுவார்த்தை

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான பான்முன்ஜோம் எல்லைப் பகுதியில், இரு தரப்பினரும் குவித்துள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த

News image
Updated On :22 அக்டோபர் 2018, 8:06 pm


வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான பான்முன்ஜோம் எல்லைப் பகுதியில், இரு தரப்பினரும் குவித்துள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது.
இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை விலக்கல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட - தென் கொரிய நாடுகளிடையே இடையிலான பான்முன்ஜோம் எல்லை கிராமம் கூட்டு பாதுகாப்புப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 250 கி.மீ. தொலைவு கொண்ட அந்த எல்லைப் பகுதியில்தான் இரு நாட்டுப் படையினரும் நேருக்கு நேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் பொதுவான பகுதி என்று அந்த எல்லைப் பகுதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 1976-ஆம் ஆண்டில் தென் கொரியத் தொழிலாளர்களை வட கொரிய வீரர்கள் தாக்கியதிலிருந்து இரு நாட்டு வீரர்களும் இங்கு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் சமரச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பான்முன்ஜோம் எல்லை கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவாத்தை அந்த கிராமத்தில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது .
இதில் வட மற்றும் தென் கொரிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கொரியப் பகுதிக்கான ஐ.நா. பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் தற்போது மீண்டும் அந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.