இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: பிரதமராக மஹிந்த ராஜபட்ச பதவியேற்பு 

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் 11-ஆவது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச பதவிஏற்றுள்ளார். 
இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: பிரதமராக மஹிந்த ராஜபட்ச பதவியேற்பு 

கொழும்பு: இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் 11-ஆவது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்ச பதவிஏற்றுள்ளார். 

இலங்கையில் இலங்கை சுதநதிரா கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபட்சவின் புதிய கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றியது ஆளும் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. 

அத்துடன் சமீபத்தில் இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பு தன்னைக் கொலை செய்ய முயன்றதாக  அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா பேசியது இருநாடுகளிடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அதனை இலங்கை அரசு மறுத்தது. இதன் காரணமாக மைத்ரிபாலா சிரிசேனா வருத்தத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த தருணத்தில் வெள்ளியன்று ஆளும் கூட்டணியிலிருந்து இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக் கட்சி வெளியேறுவதாகக் கூறி ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து விட்டது. 

இதனால் உண்டான குழப்பமான அரசியல் சூழ்நிலையின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த  இலங்கை பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே பதவி நீக்கப்பட்டு, மகிந்த ராஜபட்ச புதிய பிரதமராகத் தேர்த்தெடுக்கப்பட்டார். 

அவர் உடனேயே இலங்கை அதிபரின் செயலகத்தில் இலங்கையின் 11-ஆவது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.  

அவருக்கு பாஜகவின் சுப்ரமணியன் சுவாமி வாழ்த்தி தெரிவித்துளளார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com