எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அமெரிக்காவில் வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி 

அமெரிக்காவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :28 அக்டோபர் 2018, 10:21 am

DIN

பிட்ஸ்பர்க்: அமெரிக்காவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியாகியுள்ளனர். 

அமெரிக்காவின் பென்சில்வேணியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் யூத மக்களின் வழிபாட்டுக் கூடம் ஒன்று அமைநதுள்ளது. இந்த வழிபாட்டுக் கூடத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.  

இந்த தாக்குதலில் 11 பேர் பலியானார்கள். தகவலறிந்து விரைந்து வந்து காவல்துறையினர் மீதும் அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று அதிகாரிகள் மீதும் குண்டு பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.     

மிகுந்த போராட்டதிற்குப் பிறகு காவல் துறையினர் அந்தநபரை மடக்கிப் பிடித்தனர். அவர் பெயர் ராபா்ட் போவா் (46) என்பது தெரிய வந்துள்ளது. அவா் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

துப்பாக்கிச்சூட்டிற்கான உறுதியான காரணம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்துடன், நாடு முழுவதும் வரும் 31-ஆம் தேதி வரை துக்கம் அனுஷ்டிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.