

ஹனோய்: வியத்நாம் நாட்டின் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 61.
உடல் நலக் குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரான் தாய் குவாங், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.05 மணிக்கு உயிரிழந்தார்.
குவாங்குக்கு உலகின் தலைசிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல், சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போனதே மரணத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
வியத்நாம் நாட்டின் அதிபராக குவாங் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன்பு நாட்டின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை அவர் வகித்து வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.