
இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
சுலாவெசி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.
சிறிது நேரத்தில் சுனாமி அலைகள் 2 மீட்டருக்கும் மேல் உயர்ந்து, கரை தாண்டி வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களை அடித்துச் சென்றன. மீட்புப் பணிகளை பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த பேரழிவு காரணமாக 50 பேர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாதிப்பு இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையில், உயிரிழப்புகளும், படுகாயங்களுடன் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.