

போர் வெறியை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றிபெற நினைத்த பாஜக-வின் திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
இந்தியாவில் போர் வெறியை ஏற்படுத்தி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று நினைத்த பாஜக திட்டம் தோல்விடைந்துவிட்டது. மேலும் இது அவர்களுக்கே எதிராகவும் அமைந்துவிட்டது.
பாகிஸ்தான் விமானப்படையின் அனைத்து எஃப் 16 ரக போர் விமானங்களும் பத்திரமாக இருப்பதை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். ஏனென்றால் உண்மை மட்டுமே எப்போதும் வெல்லும். அனைவரும் உண்மையாக நடந்துகொள்வது தான் சிறந்தது என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தானின் எஃப் 16 ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டியடித்தது. அப்போது பாகிஸ்தானின் ஒரு எஃப் 16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதை வீழ்த்திய அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், பாகிஸ்தான் விமானப்படையில் அனைத்து எஃப் 16 ரக போர் விமானங்களும் இருப்பதாக அமெரிக்க நாளிதழில் வெளியுறவுத்துறை கொள்கை தொடர்பான செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.