ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை 

தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2019, 8:00 pm IST

ரியாத்: தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஷரியத் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றும் நாடான சவுதி அரேபியாவில் தீவிரவாதம் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தீவிரவாதத்துடன் தொடர்புடைய பல்வேறு செயல்களில் ஈடுபட்டதான  குற்றச்சாட்டில் அந்நாட்டை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் அவர்கள் பயங்கரவாத கொள்கைகளை தீவிரமுடன் பின்பற்றி வந்ததுதெரிந்தது.

அத்துடன் நாட்டின் பாதுகாப்பினை சீர்குலைப்பது மற்றும் குழப்பங்களை விளைவிப்பது ஆகியவற்றின் பொருட்டு மறைமுகமாகச் செயல்படும் தீவிரவாத குழுக்களை அவர்கள் உருவாக்கி வந்ததும் தெரிய வந்தது.

விசாரணையின் முடிவில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேருக்கு சவுதி அரேபியாவில் செவ்வாயன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தகவலை  சவுதி அரேபிய நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.