ஆப்கனில் போலீஸ் குடியிருப்பு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 95 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆப்கன் தலைநகர் காபூலில் போலீஸ் குடியிருப்பு அருகே இன்று கார் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் என 95 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாலிபன் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.