புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் மசூதியில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளி மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில், ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :16 ஆகஸ்ட் 2019, 11:21 am

DIN

குர்லோக்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளி மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில், ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 

பாகிஸ்தானின் வடமேற்கிலமைந்துள்ளது பலுசிஸ்தான் மாகாணம். இங்குள்ள  குச்லோக் என்னும் நகரில் உள்ள மசூதி ஒன்றில், வெள்ளி மாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்றைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிகிறது.

இந்த குண்டு வெடிப்புக்கு உடனடியாக எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.