எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஈரான் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு

ஈரான் நாட்டில் அணுமின் நிலையம் அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 என பதிவாகியுள்ளது. 

News image
Updated On :27 டிசம்பர் 2019, 5:50 am

DIN

ஈரான் அணுமின் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில்  5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. 

ஈரானின் பாரசீக வளைகுடாவின் தெற்கு கடற்கரையில் உள்ள புஷேர் என்ற அணுமின் நிலையத்திற்கு கிழக்கே 53 கி.மீ தொலைவில் 38 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.23 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் கணிசமான சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.