இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சர்ச்சைக்குரிய கருத்து: ஜப்பான் மன்னரிடம் மன்னிப்பு கேட்கதென் கொரிய எம்.பி. மறுப்பு

இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை ஜப்பான் ராணுவம் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த விவகாரத்தில் ஜப்பான்

Updated On :14 பிப்ரவரி 2019, 2:46 am IST


இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை ஜப்பான் ராணுவம் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த விவகாரத்தில் ஜப்பான் அரசருக்கு எதிராகத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று தென் கொரிய எம்.பி.யும், நாடாளுமன்றத் தலைவருமான மூன் ஹீ-சாங் தெரிவித்துள்ளார்.
1910 முதல் 1945-ஆம் ஆண்டு வரை கொரிய தீபகற்பத்தை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த ஜப்பான், கொரியப் பெண்களை தங்கள் நாட்டு ராணுவத்தினருக்கான பாலியல் அடிமைகளாக்கி வைத்திருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகத் திகழ்ந்தாலும், பாலியல் அடிமைகள் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் ஜப்பான் முழுமனதுடன் மன்னிப்பு கேட்கவில்லை என்று தென் கொரியாவும், இதுதொடர்பாக ஏற்கனவே போதுமான அளவு மன்னிப்பு கேட்டுவிட்டதாக ஜப்பானும் கூறி வருகின்றன.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு கடந்த வாரம் பேட்டியளித்த தென் கொரிய நாடாளுமன்றத் தலைவர் மூன் ஹீ-சாங், பாலியல் அடிமைகள் விவகாரத்தில் ஜப்பான் முழு மனதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஜப்பான் மன்னர் அகிடோ, தனது பதவியைத் துறப்பதற்கு முன்னரே முன்னாள் பாலியல் அடிமைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இரண்டாம் உலகப் போரின்போது போர்க் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளியின் மகன் என்ற முறையில் அவர் அதனைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
மூன் ஹீ-சாங்கின் இந்தக் கருத்து ஜப்பானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மன்னர் குறித்து அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே வலியுறுத்தினார்.
இந்த நிலையில், ஜப்பான் அரசர் குறித்து தாம் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கோரும் எண்ணமில்லை என்று மூன் ஹீ-சாங் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.