நைஜீரியாவில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகளில் 39 பேர் பலியானதாக தேர்தல் கண்காணிப்பு குழு திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து தேர்தல் கண்காணிப்பு குழுவின் செயல் இயக்குநர் கிளமெண்ட் வாங்கூ தெரிவித்துள்ளதாவது:
நைஜீரியாவில் அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை பிப்ரவரி 16-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பணியாளர் பற்றாக்குறையை காரணம் காட்டி தேர்தல் ஒருவார காலத்துக்கு ஒத்திப்போடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் 73 வேட்பாளர்கள் இருந்தாலும், தற்போதைய அதிபர் முகமது புஹாரிக்கும், முன்னாள் துணை அதிபர் அடிகு அபுபக்கருக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதுவரையில், தேர்தல் தொடர்பான வன்முறைகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 என கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசியல் வன்முறைகள் அதிகமாக நிகழும் தெற்கு மாகாணங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். பயில்ஸா மாகாணத்தில் 4 பேரும், டெல்டா மாகாணத்தில் இருவரும் பலியாகினர். இவை தவிர நாடு முழுக்க நிகழ்ந்த தேர்தல் தகராறுகளில் 17 பேர் பலியாகினர்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகளே பெரும்பாலான வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமாக அமைந்தது. ஆறு மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல் வன்முறையாளர்களால் தடைபட்டது. வாக்காளர்கள் விரட்டப்பட்டு, வாக்குப் பெட்டிகளும் தீக்கிரையாக்கப்பட்டன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிர்க்கட்சித் தலைவர் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? சிபிஐ இயக்குநர் விவகாரத்தில் ராகுல் கடும் அதிருப்தி!

அதானி குழுமப் பங்குகள் சரிவுடன் நிறைவு!
அதிமுக எம்எல்ஏக்கள் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கக் கூடாது: இபிஎஸ் தரப்பு எச்சரிக்கை!

ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்! டெலிகிராமில் வாங்கிய இளைஞர்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
