மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 90-ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 90 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :19 ஜூலை 2019, 3:14 am

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 90 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் பாய்ந்தோடும் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கன மழையால் 25 மாவட்டங்களிலுள்ள 10,385 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 90 பேர் உயரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். 

இதுதவிர மேலும் 29 பேரைக் காணவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட 3,366 பேரை ராணுவத்தினரும், காவல்துறையினரும் மீட்டனர். மீட்புப் பணிகளில் 27,380 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலேரியா, டெங்கு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

Story image

மேலும் மழை பெய்யும் என வெள்ள முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வெள்ள பாதிப்பு பகுதிகளில் நோய்கள் பரவுவதை தடுப்பதற்காகவும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காகவும் சர்வதேச அமைப்புகளிடம் நேபாள அரசு நிதியுதவி கோரியது. இதையடுத்து உதவ முன்வருவதாக சர்வதேச அமைப்புகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.