ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் பலியான பரிதாபம் 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் யுத்தம் நிகழ்ந்து வரும் பகுதியில் நடத்தப்பட்ட  தவறான வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :17 மே 2019, 3:16 pm

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் யுத்தம் நிகழ்ந்து வரும் பகுதியில் நடத்தப்பட்ட  தவறான வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே தொடந்து பல்வேறு பகுதிகளில் யுத்தம் நடைபெற்று வருகிறது  இதில் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் எப்போது உதவியைக் கோருகிறதோ அப்போது எல்லாம் அமெரிக்க மற்றும் கூட்டணி நாடுகளின் படைகள்  தாக்குதலுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.  

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் யுத்தம் நிகழ்ந்து வரும் பகுதியில் நடத்தப்பட்ட  தவறான வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் தாலிபான்களுக்கு எதிராக அரச படைகள் யுத்தம் நிகழ்த்தி வந்தன. அப்போது வெளிநாட்டு படைகள் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் இத்தாக்குதலில் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்க படைகள்தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று தாலிபான் தரப்பு உட்பட அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்கா தரப்பில் இவ்விவகாரம் தொடர்பாக இதுவரை எந்தஒரு விளக்கமும் தரப்படவில்லை. 

இந்த தாக்குதல் குறித்து விசாரணை  நடத்தப்படும் என்று ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.