அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்கவும், ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவும் அந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்க அரசால் ஒரு போலி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்காணித்தது. அதன்படி, இந்தப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த 161 மாணவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும், 90 மாணவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இந்திய மாணவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.