வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

இத்தாலியத் தீவு ஒன்றில் அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி 

இத்தாலிய நாட்டுத் தீவு ஒன்றில் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

இத்தாலி படகு விபத்து

Updated On :7 அக்டோபர் 2019, 11:24 am

PTI

மிலன்: இத்தாலிய நாட்டுத் தீவு ஒன்றில் அகதிகள் பயணம் செய்த படகு கவிழ்ந்து 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு கடற்படை திங்களன்று தெரிவித்துள்ளதாவது:

சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்துகொண்டிருந்த குறிப்பிட்ட படகானது,  இத்தாலியின் லம்பெடுசா தீவிலிருந்து 6 மைல் தொலைவில் நள்ளிரவில் கடலில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த ரோந்து கப்பலானது இதைக் கண்டு நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் அந்த படகில்பயணம் செய்த 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.      

வேறு சில தகவல்களின்படி குறிப்பிட்ட கப்பலில் சுமார் 50 பேருக்கு மேல் பயணம் செய்தார்கள் என்றும் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.