1986-ம் ஆண்டில் பிறந்த சீனாவின் தோங் இனத்தைச் சேர்ந்த யாங்சேங்லான் என்ற பெண், குய்சோ மாநிலத்தின் தேங்ஃபேங் தோங் ஊரிலிருந்து சென்று கல்வி பயின்ற முதல் பல்கலைக்கழக மாணவர் ஆவார்.
2016-ம் ஆண்டு மார்ச் மாதம், அவர் தனது கணவருடன் நகரிலுள்ள பணிகளை விட்டுவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி தொழில் துவங்கினார்.
உள்ளூர் மகளிர்கள் தயாரித்த தோங் இனத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கைவினைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் தொழிலை தொடங்கி அதன்மூலம், அவர்கள் செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழ்கின்றனர்.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு