ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பிரிக்ஸ் நாடுகள் சிந்தனைக் கிடங்கு அமைப்பின் சர்வதேச ஆய்வுக் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகள் சிந்தனை கிடங்கு அமைப்பின் சர்வதேச ஆய்வுக் கூட்டம் செப்டம்பர் 13-ஆம் நாள் பிரேசிலின் யுஎஸ்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

News image
பிரிக்ஸ் கூட்டமைப்பு | கோப்புப் படம்
Updated On :14 செப்டம்பர் 2019, 9:08 am

DIN

பிரிக்ஸ் நாடுகள் சிந்தனை கிடங்கு அமைப்பின் சர்வதேச ஆய்வுக் கூட்டம் செப்டம்பர் 13-ஆம் நாள் பிரேசிலின் யுஎஸ்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் 11 உயர் கல்வி நிறுவனங்கள், சிந்தனைக் கிடங்குகள் மற்றும் ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த அறிஞர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

எண்ணியல் பொருளாதார ஒத்துழைப்பு, அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகியவை குறித்து அவர்கள் விவாதம் நடத்தினர்.

பிரிக்ஸ் நாடுகள் சிந்தனைக் கிடங்கு ஒத்துழைப்புக்கான சீனச் செயற்குழுவின் துணைச் செயலாளர் டொங் வெய்ஹுவா இக்கூட்டத்தில் கூறுகையில், 2018-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், புதிய தொழில் புரட்சியின் கூட்டுறவை உருவாக்க முடிவு செய்தனர்.

இது, பிரிக்ஸ் நாடுகள் 4ஆவது தொழில் புரட்சிக்குத் தலைமைத் தாங்குவதற்கான திசையை உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.