ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 601 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உருவாகி, உலகம் முழுவதும் 216 நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. உலகளவில் அந்த வைரஸுக்கு இதுவரை 1,056,581 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 55,780 பலியாகியுள்ளனர்.
அதேசமயம் வைரஸ் பாதிப்பில் இருந்து 224,007 குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 601 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மாஸ்கோவில் 448 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன் அங்கு ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,149ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று காரணமாக 4 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.