சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கரோனா: சிங்கப்பூரில் பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 12:18 pm

DIN

சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் இந்த வைரஸால் இதுவரை 21,97,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,47,512 பேர் பலியான நிலையில் 5,57,618 பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் சிங்கப்பூரில் நேற்று மட்டும் புதிதாக 728 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4400ஐ தாண்டியுள்ளது. மேலும் கரோனாவுக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் 90 சதவீதம் பேர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.