மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயம்: ஆலோசனையில் பிரிட்டன்
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் ஆலோசித்து வருகிறது.


இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் ஆலோசித்து வருகிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமானவர் மகாத்மா காந்தி. உலக அளவிலும் மிகமுக்கியத் தலைவராக அறியப்படும் மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் அவரின் உருவம் பொறித்த நாணயத்தை தயாரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பிரிட்டன் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் நிதி மந்திரி ரிஷி சுனக், ராயல் புதினா ஆலோசனைக் குழுவிடம் (ஆர்.எம்.ஏ.சி) பிரிட்டனில் சிறுபான்மையினராக உள்ள மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டால் அது இந்திய - பிரட்டன் உறவிலும் இணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...