விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிலிப்பின்ஸில் இரட்டை குண்டுவெடிப்பு: 5 வீரர்கள் பலி

பிலிப்பின்ஸில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 5 வீரர்கள் பலியானார்கள். 

News image

கோப்புப் படம்

Updated On :24 ஆகஸ்ட் 2020, 7:36 am

பிலிப்பின்ஸில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 5 வீரர்கள் பலியானார்கள். 

தெற்கு பிலிப்பின்ஸின் ஜோலோ நகரில் உள்ள வணிக கட்டடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ டிரக்கை குறிவைத்து முதல் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 வீரர்கள் பலியானதாக தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இருப்பினும், இரண்டாவது குண்டுவெடிப்பில் உயிரிழப்புகள் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்று தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பிலிப்பின்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.